உ.பி, கோவா மற்றும் உத்தரகாண்டில் தோல்வியடைந்த 3 முதல் அமைச்சர்களும் ராஜினாமா
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில், உ.பி.யிலும் உத்தரகாண்டிலும் தொடக்கம் முதலே பா.ஜ.க. பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்தது. உ.பியில் ஆளும் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்து வந்தது.
இந்நிலையில், முபாராக்பூர் தொகுதியில் போட்டியிட்ட உத்தரப்பிரதேச முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ஷா ஆலம் உர்ஃப் குட்டு ஜமாலி-யிடம் சுமார் 700 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதையடுத்து அகிலேஷ் யாதவ் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதேபோல், உத்தரகாண்டில் தோல்வியடைந்த முதலமைச்சர் ஹிரீஷ் ராவத் மற்றும் கோவாவில் தோல்வியடைந்த முதலமைச்சர் லக்ஷ்மி காந்த் பர்சேகர் ஆகியோரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
அவர் தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் ராம் நாயக்கிடம் வழங்கினார். அதனை கவர்னர் ஏற்றுக்கொண்டு அடுத்த ஆட்சி பொறுப்பேற்கும் வரை இடைக்கால முதலமைச்சராக நீடிக்கும்படி அகிலேஷ் யாதவை கேட்டுக்கொண்டார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.