விஜய் மல்லய்யாவின் ராஜினாவை ஏற்றுக்கொண்டார் ஹமீது அன்சாரி.
வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு பணத்தை திருப்பிச் செலுத்தாத தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு முடக்கி உள்ளது. இங்கிலாந்தில் உள்ள அவரை அமலாக்கத்துறையின் விசாரணைக்காக இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. அவரை கைது செய்ய மும்பை நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது.
இந்த நிலையில், விஜய் மல்லையாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறித்து அவரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதன் முதல்படியாக பாராளுமன்ற நெறி முறைகள் குழு விஜய் மல்லையாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
மே 3 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பட்டு இருந்த நிலையில், தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை விஜய் மல்லையா ராஜினாமா செய்தார். கர்நாடகாவில் இருந்து சுயேச்சையாக மாநிலங்களவைக்கு விஜய் மல்லையா தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.
விஜய் மல்லையாவின் ராஜினாமா கடிதத்தை அமீது அன்சாரி நேற்று நிராகரித்து இருந்தார். கடிதத்தில் பரிந்துரைக்கப்பட்ட முறையான நடைமுறைகளை உறுதி செய்யவில்லை என்றும் அசல் கையெழுத்து கூட இடவில்லை என்றும் அன்சாரி தெரிவித்தார்.
இந்நிலையில், மல்லையாவின் ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவை தலைவரான அமீது அன்சாரி ஏற்றுக் கொண்டுள்ளார். மாநிலங்களவை துணைத் தலைவர் குரியன் இந்த தகவலை அவையில் தெரிவித்தார். மேலும், மே 4-ம் தேதி முதல் ராஜினாமா நடைமுறைக்கு வரும் என்று அவர் கூறினார்.
முன்னதாக, விஜய் மல்லையாவை எம்.பி. பதவியில் இருந்து உடனடியாக நீக்குவதற்கு மாநிலங்களவை நெறிமுறைகள் குழு அவைத்தலைவருக்கு இன்று பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.