விஜயகாந்த் உளுந்தூர் பேட்டையில் மனுதாக்கல் செய்தார்.
2006-ம் ஆண்டு விருத்தாச்சலம் தொகுதியில் தனித்து போட்டியிட்டு வெற்றிபெற்ற விஜயகாந்த், கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில், வரும் 16-ம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக, தற்போது உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடும் விஜயகாந்த், இன்று பிற்பகல் 1.40 மணியளவில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் மற்றும் மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் இங்குள்ள வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்த விஜயகாந்த், தொகுதி தேர்தல் அலுவலரான முகுந்தனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
விஜயகாந்துக்கு மாற்று வேட்பாளராக உளுந்தூர்பேட்டை ஒன்றிய தே.மு.தி.க. செயலாளர். குழந்தைவேலுவும் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.