ரிஷிவந்தியம் தொகுதியை மாற்றுகிறார் விஜயகாந்த்; வேறு மாவட்டத்திலிருந்து போட்டி.
விஜயகாந்த் தே.மு.தி.க. கட்சியை தொடங்கிய பின் முதன் முதலாக 2006–ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கடந்த சட்டசபை தேர்தலில் அவர் தொகுதி மாறினார். விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
இந்த சட்டசபை தேர்தலில் அவர் எங்கு போட்டியிடப் போகிறார் என்பது மர்மமாக உள்ளது. ரிஷிவந்தியம் தொகுதியில் மீண்டும் போட்டியிடமாட்டார் என்றும் பக்கத்து தொகுதியான திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிடப்போகிறார் என்றும் பேச்சு அடிபட்டது.
ஆனால், இப்போது அவர் மீண்டும் தொகுதி மாறுவார் என்று தெரிகிறது.
இது பற்றி முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘விஜயகாந்த் 2006 சட்டசபை தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் போட்டியிட்டார். கடந்த தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் அவர் வேறு மாவட்டத்துக்கு மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது’’ என்று கூறினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.