மைசூர் அரண்மனை பாதுகாப்பில் குளறுபடியா? இளம் ஜோடி அத்துமீறி எடுத்த புகைப்படத்தால் சர்ச்சை.
கர்நாடகாவில் மிகவும் பிரசித்தி பெற்ற மைசூர் அரண்மனை பல கலை அம்சங்களுடன் கட்டப்பட்டது ஆகும்.
பாதுகாப்பு கருதி அரண்மனையை பார்வையிட வரும் பார்வையாளர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
இங்குள்ள கல்யாண மண்டபம், தர்பார் ஹாலில், இளம் ஜோடி எடுத்துக் கொண்ட பல்வேறு புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆதித்யா – நவ்யா என்ற அந்த ஜோடி பிப்ரவரி மாதம் அரண்மனை சென்று உள்ளனர். பாதுகாப்பு கெடு பிடிகளையும் மீறி அரண்மனைக்குள் ஜோடியாக நின்று பல்வேறு புகைப்படங்களை எடுத்து உள்ளனர். அந்த புகைப்படம் 2 நாள் முன்பு சமூக வலைதளங்களில் வெளியானது.
இது கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது அரண்மனை பாதுகாப்பில் உள்ள ஓட்டையையும், குளறுபடியையும் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது. ராஜகுடும்பத்தினரை இது அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்த மைசூர் மண்டல தலைவி சி.சிகா உத்தரவிட்டு உள்ளார்.
இதுகுறித்து ராஜமாதா பிரமோதாதேவி கூறும் போது, அரண்மனையில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டு உள்ளது கண்டு வருத்தம் அடைகிறோம். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்றார்.
அரண்மனைக்குள் படம் எடுக்க யாருக்கும் அனுமதி கிடையாது. இதற்கு முன்னர் கன்னட நடிகர் ராஜ்குமார் நடித்த மயுரா என்ற சினிமா படப்பிடிப்பு மட்டும் அரண்மனையில் நடத்த அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.