தமிழக மக்களை ஏமாற்ற நினைக்கிறார் ஜெயலலிதா. இலவச மிக்சியும், இலவச செல்போனும் எவன் கேட்டான்? எங்களுக்கு வேண்டியது நல்ல அரசாங்கம்- சீமான் பேச்சு.
தமிழகத்தில் இலவசங்களை தந்து அரசியல் கட்சிகள் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டினார்.
திருவண்ணாமலையில் நடந்த அக்கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், மக்களுக்கு தேவை தரமான கல்வி. இலவசங்கள் எதுவும் தேவையில்லை. ரேஷன் கார்டுக்கு அலைபேசி இலவசமாம். அலைபேசி வாங்கி, அம்மா ஜெயலலிதாவோட நேரடியாக பேகிக்கிறதா. யாருக்கு பேசுறது. யார் கேட்டது அலைபேசி. எவன் கேட்டான் மிக்ஸி. எவன் கேட்டான் கிரைண்டர். யார் இதையெல்லாம் கேட்டு போராடினார்கள்.
நான் கேட்பது கல்வி, கல்விக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற சம்பளம். அதைக்கொண்டு மேண்மையான வாழ்க்கை என்பதை நான் கேட்கிறேன். இவ்வாறு பேசினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.